பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !!

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவல் !! post thumbnail image
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இது மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக திட்டவட்டமாக கூறினார்.

ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

பிரான்ஸ் நாட்டின் மீடியாபார்ட் எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி