அரசியல் மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??

மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ??

மோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா ?? post thumbnail image
நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி மீண்டும் பேசப்படுகிறது .

நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடிமகன்கள் எல்லோரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று மோடி கூறி இருந்தார் .

இது பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் ஒரு ரூபாய் கூட போடப்படவில்லை.பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

” நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்தோம். அப்படி நினைத்துதான் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.

இப்போது மக்கள் எங்களிடம் அந்த வாக்குறுதி குறித்து கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். வேறு வழியில்லை” என்றுள்ளார்.

இவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தீனியாகவும் , பாஜகவிற்கு,மக்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: