அரசியல் ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!

ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !!

ஊழல்வாதி பிரதமர் – ராகுல் காந்தி கடும் தாக்கு !! post thumbnail image
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த போது , இந்தியாவிலேயே உற்பத்தில் செய்யும் பணியை இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், புதிய ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இது மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபர், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியதாக திட்டவட்டமாக கூறினார்.

ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இணைந்ததற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

பிரான்ஸ் நாட்டின் மீடியாபார்ட் எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது

“முன்னதாக பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் ரிலையன்ஸ் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அதையே ரஃபேல் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இது இந்த ஊழலில் ஒரு தெளிவு ஆகும்.

திடீரென்று பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டது ஏன்? அதற்கு என்ன இப்போது அவசரம்? இந்தியாவின் பிரதமர் ஒரு ஊழல்வாதி என இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.

டசால்ட் பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அரசாங்கம் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதைத்தான் டசால்ட் கூறுகிறது.

பிரதமர் இந்த இழப்பீடு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அவர்களின் உள் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது “என அவர் தெரிவித்துள்ளார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி