நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் கூறி விட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கும் ரத்து செய்யப்பட்டது .
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், நக்கீரன் கோபால் சார்பாக வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார்.
நக்கீரன் கோபால் மீது 124 பிரிவின் கீழ்வழக்குப் பதிய முடியாது .
ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை.ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும்,கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.
கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம்,ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் வழக்கு தொடரப்பட்டதா ? என நீதிபதி சரமாரியாக கேள்விகளை கேட்டார்.
மேலும் பத்திரிகையாளர் தரப்பில் இந்து ஆசிரியர் ராம் 124ஆம் பிரிவின் கீழ் இது வராது என பத்திரிகையாளர் தரப்பு வாதங்களை விளக்கினார் .அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் ஏதும் தெரியாது என்று கூறினார்.
இதையடுத்து,நக்கீரன் கோபாலை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை, 124 பிரிவின் கீழ் இவ்வழக்கு வராது எனக்கூறி நீதிபதி அவரை விடுதலை செய்தார்.
முன்னதாக கைதுசெய்யப்பட்ட நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்து சென்ற போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவரை சந்தித்தார்.வைகோ நீதிமன்றத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார்.
நக்கீரன் கோபால் கைதினை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே