செய்திகள்,பரபரப்பு செய்திகள் தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை !

தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை !

தற்காலிகமாக முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை ! post thumbnail image
தற்காலிகமாக முடங்கிய அவசர அழைப்பு எண் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்பு எண் 108 விபத்து மற்றும் மருத்துவ அவசர காலங்களில் அழைக்கலாம். பி.எஸ்.என்.எல்., தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதால், 108 அழைப்புக்கான சேவை பிற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது.

இதனை சேவை மையத் தலைமையகம் அறிவித்தது, விரைவில் சரிசெய்யப்படும் என்றும் கூறியது.

எனவே மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 என்ற எண்ணுக்கு பதில், தற்காலிகமாக அழைப்பதற்காக மற்றொரு எண்ணையும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், 108 அழைப்பு சேவை மீண்டும் சீராகிவிட்டதால், தற்காலிக எண்ணுக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி