அரசியல்,பரபரப்பு செய்திகள் நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- வேளாண்துறை அமைச்சர்

நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- வேளாண்துறை அமைச்சர்

நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- வேளாண்துறை அமைச்சர் post thumbnail image
>நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

காங்கிரஸ் – திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பாக தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது.அதில் ஒன்றில் பேசிய அமைசர் துரைக்கண்ணு ” யாரைப்பார்த்து குற்ற ஆட்சி என்கிறாய்,தவறாய் பேசுகிறாய் .நாக்கை அறுத்துவிடுவேன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுவருகிறது.” என்று பேசினார் .

கண்டனம் :
அமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது .பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.தானும் அதிமுக அரசை விமர்சனம் செய்துச பேசியுள்ளேன், தனது நாக்கையும் அறுப்பார்களா என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் 7 கோடி பேரின் நாக்கை அறுக்கும் துணிவும் தெம்பும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் துரைக்கண்ணு ” நாக்கு அழுகிவிடும் என்று கூறுவதுக்கு பதிலாக
நாக்கை அறுத்துவிடுவேன் என கூறிவிட்டான் ” என்று கூறினார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: