அரசியல்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பாரதீய சனதா தலைவர் தமிழிசை சக விமான பயணியுடன் வாக்குவாதம், கைது படலம்!!!

பாரதீய சனதா தலைவர் தமிழிசை சக விமான பயணியுடன் வாக்குவாதம், கைது படலம்!!!

பாரதீய சனதா தலைவர் தமிழிசை சக விமான பயணியுடன் வாக்குவாதம், கைது படலம்!!! post thumbnail image
தமிழ்நாடு:தூத்துக்குடி: தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதீய சனதா தலைவர் தமிழிசை தூத்துக்குடியை சேர்ந்த இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் அந்த விமான பயணியை கைது செய்யும் நிலைக்கு சென்றுள்ளது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அந்தப் பெண் ஏதோ கூறியதால், கோபமடைந்த தமிழிசை செளந்தரராசன் அந்தப் பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராசன் இன்று கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணமானார்.

தமிழிசை பயணம் செய்த அந்த விமானத்துக்குள்ளேயே ஒரு தனியாளாக சக விமான பயணி சோபியா என்கின்ற இளம் பெண் பாரதீய சனதாக்கு எதிராக முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாரதீய சனதாவை விமர்சித்து முழக்கமிட்ட அந்த பெண்ணிடம் பாரதீய சனதா தமிழக தலைவர் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாரதீய சனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.  அதிகாரம் உத்தரவு கொடுத்தவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய காவல்த்துறை உடனடியாக கைது செய்து தமிழிசையை குளிர்வித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி