போ போ அமெரிக்கா… வா வா கனடா…

போ போ அமெரிக்கா… வா வா கனடா… post thumbnail image
அனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி அளிக்க உள்ளது. குறிப்பாக அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, என அனைத்து நாடுகளும் அதிக கட்டுப் பாடுகளை விதித்து கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கனடா நடப்பாண்டில் மட்டும் 3,10,000 வெளிநாட்டினருக்கு தங்கள் நாட்டில் குடியேற அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது, இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கும் , 2020-ம் ஆண்டில் 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் குடியுரிமை

கனடாவின் பொருளாதாரம் மற்றும் வணிகங்களைச் சமாளிக்க மற்றும் ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்களை கனடா குடியமர்த்த வேண்டியிருக்கும் என்று மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கனடாவில் நிரந்தரமாகக் குடிபெயர்பவர்களுக்கு பல வசதிகளை அந்த நாடு கொடுக்கிறது குறிப்பாக இலவச மருத்துவக் காப்பீடை குறுப்பிடலாம் அது மற்றும் இன்றி சமீப காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிபெயர கடுமையான விதிகள் இருக்கும் பட்சத்தில் கனடா குடிபெயரும் விதிகளை தளர்த்தி இருப்பது வெளிநாட்டினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி