பிரபல நடிகை ஜோதிர்மயி, மலையாள டைரக்டருடன் 2ம் திருமணம்!…

சென்னை:-மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிர்மயி. தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன், சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு இவருக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஜோதிர்மயி சினிமாவில் நடித்தார். இதில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தனித்தனியாக வாழ்ந்த இவர்களுக்கு கடந்த 2011–ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதன் பிறகும் ஜோதிர்மயி மலையாள படங்களில் நடித்து வந்தார். இதில் மலையாள திரையுலகின் முன்னணி டைரக்டர் ஆன அமல் நீரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மம்முட்டி நடித்த ‘பிக் பி’ என்ற படம் மூலம் மலையாள பட உலகில் நுழைந்து, மோகன்லால் நடித்த ‘சாகர் அலையாஸ் ஜாக்கி’, பிருதிவிராஜ் நடித்த ‘அன்வர்’ மற்றும் ‘பேச்சலர்ஸ் பார்ட்டி’, ‘இயோப்பின்டே புஸ்தகம்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலம் ஆனார். இவர்களின் பழக்கம் காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கொச்சியில் உள்ள டைரக்டர் அமல் நீரத்தின் வீட்டில் இந்த திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.

எர்ணாகுளம் சார்பதிவாளர் வீட்டுக்கே சென்று இருவரின் திருமணத்தை நடத்தி வைத்து பதிவு செய்தார். அமல் நீரத்தின் பெற்றோர் ஒமன குட்டன்–ஹேமலதா மற்றும் ஜோதிர்மயின் தாயார் சரஸ்வதி ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர். திருமணத்தில் டைரக்டர்கள் அன்வர்ராஜ், ஷைஜு பாலிக், சமர்தாகீர் மற்றும் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago