சென்னை:-‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்தவர் எடிட்டர் கிஷோர். சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு இருந்தால் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்களில் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், இன்று அவருக்கு மீண்டும் உடல்நிலை மோசமானது. இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. 36 வயதான கிஷோருக்கு இன்னும் திருமணமாகவில்லை. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் இவரது சொந்த ஊர் ஆகும். ‘ஈரம்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர். ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த எடிட்டர் என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். கிஷோரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago