செய்திகள்,திரையுலகம் நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…

நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!…

நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்!… post thumbnail image
சென்னை:-ஊட்டி சுற்றுலா தலம் என்பதால் நடிகர், நடிகைகள் பலர் அங்கு வீடுகள், நிலங்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நிலம் வாங்கி வீடுகள் கட்டி வைத்துள்ளார்கள். ஓய்வில் குடும்பத்தோடு அங்கு போய் தங்கி விட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, நடிகர், நடிகைகளும் அங்கு வீடுகள் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரிய தொகை கொடுத்து வீடுகள் வாங்கி போட்டுள்ளனர்.

ராயல் கேஸ்டில் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் ஆகியோர் வீடுகள் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீடுகளுக்கு நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். பல தடவை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரி செலுத்தவில்லையாம்.
இதையடுத்து நயன்தாரா, ஜெயராம் ஆகிய இருவருக்கும் ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் அவர்களுடைய வீடுகளில் ஒட்டப்பட்டு உள்ளது. சொத்துவரி பிரச்சினை குறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறும்போது, ‘ராயல் கேஸ்டில்’ அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராம் மற்றும் தொழில் அதிபர்களின் பெயரில் உள்ள கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே சொத்து வரியை செலுத்த வலியுறுத்தி நாங்கள் ஒட்டிய நோட்டீசை குடியிருப்பு பராமரிப்பாளர்கள் கிழித்து எறிந்ததால் தற்போது ‘ஸ்டென்சில்’ கட்டிங் மூலம் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளோம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி