செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!…

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான கத்தியில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் சமந்தா. தமிழில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சமந்தாவிற்கு ‘கத்தி‘ மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் மீண்டும் இளையதளபதி விஜய்யுடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

கத்தியை தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் விஜய். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு நாயகியாக சமந்தாவை தேர்வு செய்துள்ளனர். இப்படத்தில் விஜய், சமந்தா, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி