கடலில் விழுவதற்கு முன் ஏர் ஏசியா விமானத்தின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது – அதிகாரி தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடலுக்குள் கிடந்த விமானத்தின் கருப்பு பெட்டி சமீபத்தில் மீட்கப்பட்டது. அதில் உள்ள பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கருப்பு பெட்டியில் இரைச்சலுடன் பல அலாரங்கள் பதிவாகியிருப்பதாகவும், அதில் ஒன்று விமானம் கட்டுப்பாட்டை இழந்து செல்வதை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை அலாரத்தில், பைலட்டும் துணை பைலட்டும் விமானத்தை நிலைப்படுத்தி விபத்தை தவிர்க்க கடுமையாக முயற்சி செய்வது கேட்பதாகவும், இரைச்சல் காரணமாக அவர்கள் பேசுவது சரியாக பதிவாகவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

விமானம் கடலில் விழுவதற்கு முன், மோசமான வானிலை காரணமாக வழக்கத்திற்கு மாறான உயரத்தில் பறந்ததாக இந்தோனேசிய போக்குவரத்து துறை மந்திரி கூறியதையடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago