இது தொடர்பாக டெங்கு தடுப்பூசியை தயாரித்த சனோபி பாஸ்டர் நிறுவனம் அளித்த தகவலில், டெல்லி, லூதியானா, பெங்களூரு, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு சோதனை முயற்சியாக டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சோதனையின் முடிவில் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நலமுடன் இருந்தனர். இதனால் இச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தடுப்பூசி, பாதுகாப்பானதாகவும், டெங்கு எதிர்ப்பாற்றலை’ கொண்டுள்ளதாகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சனோபி பாஸ்டர் நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசி திட்டத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தலைவர் டாக்டர் நிகோலஸ் சார்லஸ் தெரிவிக்கையில், இந்திய அதிகாரிகள் எங்களை டெங்கு தடுப்பூசி சார்ந்த ஆய்வு மேற்கொள்ள கேட்டுகொண்டதன்பேரில், நாங்கள் இந்த சோதனையை செய்தோம். இந்த சோதனை முடிவுகள் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சனோபி நிறுவனம் இந்த சோதனை முடிவை, மலேரியா மற்றும் பரவக்கூடிய நோய்கள் மற்றும் புறப்பரவியல் நிபுணர்களின் வருடாந்திர மாநாட்டில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே