செய்திகள்,திரையுலகம் மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…

மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!…

மீண்டும் சரித்திரப் படம் இயக்க மாட்டேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி!… post thumbnail image
சென்னை:-தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். படம் இரண்டு பாகமாக தயாராகி வருகிறது. முதல் பாகம் வெளியான பின் ஆறு மாதம் கழித்து இரண்டாவது பாகம் வெளிவரும் என்கிறார்கள்.

இனி எதிர்காலத்தில் சரித்திரப் படங்களை அவர் இயக்கப் போவதில்லையாம். அப்படிப்பட்ட படங்களை இயக்கும் போது, அது நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறதாம். தனக்கு மட்டுமல்ல, படங்களில் நடிப்பவர்களும் நீண்ட காலம் அந்தத் தயாரிப்பில் ஈடுபட வேண்டியிருக்கிறது. சினிமா என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அதனால்தான் இப்படிப்பட்ட படங்களையும் எடுத்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சரித்திரப் படங்களை இயக்கினேன். இனி, அப்படிப்பட்ட படங்களை இயக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக ராஜமௌலி சொல்லியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி