செய்திகள்,திரையுலகம் சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…

சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…

சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார், விஜய்.

ஏற்கனவே 5 பாடல்களை பதிவு செய்து கொடுத்து விட்ட இசையமைப்பாளர் அனிருத், விஜய் பாட வேணடிய நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். அதனால் சில நாட்களுக்கு முன்பே அவரிடம் டியூனை கொடுத்து பயிற்சி எடுக்க சொன்னவர் அந்த பாடலையும் விஜய் பாட பதிவு செய்து விட்டார்.

‘செல்ப்பி புள்ள’ என்று தொடங்கும் பெப்பியான அந்த பாடலை ஒரே மணி நேரத்தில் பாடிக்கொடுத்தாராம் விஜய. கதைப்படி செல்ப்பி பிரியரான சமந்தாவை புகழும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கிறதாம். விஜய் பாடியுள்ள இந்த பாடலை மெகா ஹிட் பண்ணிவிட வேண்டும் என்று பாடலில் புதுமையான இசைக்கருவிகளை இணைத்து கலர்புல்லாக உருவாக்கியிருக்கிறாராம் அனிருத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி