புதியதோர் உலகம் செய்வோம் (2014) திரை விமர்சனம்…

ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் நான்கு நண்பர்களாக ஆஜித், அனு, யாழினி, சூர்யேஸ்வர். இவர்கள் நால்வரில் அனு, யாழினி இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆஜித், சூர்யேஸ்வர் இருவரும் பெரிய பணக்காரர்கள். இருந்தும் நால்வரும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.நான்கு பேரில் யாழியின் அம்மாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போகிறது. அவரது சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வீடு கட்டும் இன்ஜினியரான ஆஜித்தின் அப்பாவிற்கு லஞ்சமாக கொடுக்கிறார் யாழினியின் அப்பா. இதனால் யாழினியின் அம்மாவுக்கு சிகிச்சை அளிக்கமுடியவில்லை.

அந்த லஞ்சத்தை வாங்கியது தனது அப்பாதான் என்று தெரிந்ததும், ஆஜீத் அந்த பணத்தை எடுத்துவந்து யாழினியிடம் கொடுத்து விடுகிறார். இதேபோல் போலீசாக இருக்கும் சூர்யேஸ்வரின் அப்பாவும் லஞ்சம் வாங்கி திளைக்கிறார்.தனது அப்பாக்கள் லஞ்சம் வாங்குவதை தட்டிக் கேட்க நினைக்கும் இவர்கள், இதை நேரடியாக தங்களுடைய மியூசிக் மாஸ்டரான பிரவீணிடம் சென்று முறையிடுகின்றனர். அவர், லஞ்சம் வாங்கி கொழுத்து போயிருக்கும் பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து இல்லாத ஏழைகளிடம் கொடுக்கும் இமான் அண்ணாச்சியை கைகாட்டுகிறார்.இமான் அண்ணாச்சியை இவர்கள் சந்தித்து, தங்கள் அப்பாக்கள் லஞ்சம் வாங்காமல் தடுத்து நிறுத்தினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சின்னத்திரையில் பாடகர்களாக வலம்வந்த ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்கேட்ஸ் அழகேசன் உள்ளிட்ட பலர் நடிகர்களாக உருமாறியிருக்கிறார்கள். அனைவரும், ஓரளவுக்கு நடித்திருத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

நம் நாட்டின் முதுகெலும்பை உடைத்துக் கொண்டிருப்பதே லஞ்சம் தான். குழந்தையை கொஞ்சும் அப்பாக்களைவிட லஞ்சத்துக்காக கெஞ்சுபவர்கள்தான் அதிகம். அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் இப்படியொரு படம் மாதத்திற்கு ஒன்று ரிலீஸ் ஆகவேண்டும். அப்போதுதான் லஞ்சம் வாங்கும் பெற்றோர்களை வீட்டிலிருக்கும் குழந்தைகள் தட்டிக் கேட்பார்கள். இதை எடுத்துச் சொன்ன இயக்குனர் நித்தியானந்தனுக்கு பாராட்டுக்கள்.பண முதலைகளிடமிருந்து பணத்தை அடித்து ஏழைகளிடம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் செய்யும் சேட்டைகளை ரசிக்க முடியவில்லை. படத்தின் இசையமைப்பாளரான பிரவீண் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு காதலியும் இருக்கிறார். இவர் காதலிக்கும் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை அருமை. பாடல்களும் அலுப்பு தட்டவில்லை.

மொத்தத்தில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ புதியதோர் உலகிற்கான பாடம்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago