அப்போது, ஒரு பிரபல நடிகரின் வாரிசு, ரஜினி அண்ணன்தானே இப்போதும் சூப்பர் ஸ்டார். அவர் சினிமாவில் இருக்கிறப்பவே இன்னொரு நடிகருக்கு சூப்பர் ஸ்டார் பட்டமா? ஆளை விடுங்க. என்னையெல்லாம் இந்த விழாவுக்கு தயவுசெய்து கூப்பிடாதீங்க என்று நெத்தியடியாக சொல்லிவிட்டு நழுவிடிக்கொண்டாராம்.அதேபோல் இன்னும் சில இளவட்ட ஹீரோ மற்றும் காமெடியன்கள், தாங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு தளபதிக்கு கிரீடம் சூட்டினால், தல எங்களை கோபித்துக்கொள்வார். அதோடு ரஜினிக்கும் எதிர்ப்பாக செயல்பட்டு போன்ற நிலை உருவாவதோடு, எங்களுக்கு போட்டியாக ஒரு எதிரணியும் உருவாகும். அதனால் எதற்கு வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டும் என்று தங்கள் கருத்தை சொல்லி கழண்டு கொண்டார்களாம்.
விழாவில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்-நடிகைகள் யாருமே வரமாட்டார்கள் என்பது புரிந்து விட்டது. இதற்கிடையே ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால், மதுரையில் விழா நடக்க அனுமதி வழங்குவதிலும் காவல்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதையெல்லாம் பார்த்த விழாக்குழு, விழா நடத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளதாம். அதனால் விஜய்யின் சூப்பர் ஸ்டார் விழா காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே