இதில் மக்களின் விருப்பத் தேர்வில் அதிக வாக்குகள் பெற்ற சிற்பத்திற்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார். உலக நாடுகளில் இருந்து மொத்தம் 20 பிரபல கலைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் பட்நாயக்கின் சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.அட்லாண்டிக் சிட்டியின் மேயர் முதல் பரிசையும், விருதையும் அவருக்கு அளித்தார். அமெரிக்காவில் நடந்த இந்த முதல் மணல் சிற்பக் கலைப் போட்டியில் என்னைத் தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த உலகக் கோப்பை போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என்று பட்நாயக் தெரிவித்தார்.
இரட்டையர் கலப்பு போட்டியில் இவர் அமெரிக்காவின் சிற்பக் கலைஞர் மாத்யு ராய் டைபெர்ட்டுடன் இணைந்து தாஜ்மஹாலை உருவாக்கினார். இதில் இவர்கள் ஐந்தாம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒடிஷா மாநிலத்தின் பூரி நகரில் பிறந்த சுதர்சன் பட்நாயக் (வயது 37) தற்போது அங்கு மணல் சிற்பக்கலைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்தியாவின் பத்மஸ்ரீ விருதை இந்த வருடம் பெற்ற இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளிலும், திருவிழாக்களிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். சமூக விழிப்புணர்வு மற்றும் சமகாலப் பிரச்சினைகள் குறித்த சிற்பங்களை உருவாக்குவதில் இவர் மிகவும் பெயர் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே