வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை என நடிகை குஷ்பு தகவல்!…

சென்னை:-நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை கருணாநிதிக்கு அனுப்பிவைத்தார். அதில், தன்னுடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாக நீடிப்பதால் தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அவர் குறிபிட்டு உள்ளார்.முடிவை அவர் அறிவித்த பிறகு, அவருக்கு ட்விட்டரும் தொலைபேசியிலும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். நலம் விசாரித்தனர். அவர்களுக்கு பதில் தரும் விதமாக தான் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ட்விட்டரில் அடுத்தடுத்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார் குஷ்பு.

ஒரு ட்விட்டில், இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி. மீடியா மற்றும் நண்பர்கள் என்னைத் தனிமையில் விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. வீட்டுக்கு வெளியே நிற்கும் பத்திரிகையாளர்கள் கிளம்பிச் செல்லலாம். காரணம் நான் வெளிநாட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்,என்று தெரிவித்துள்ளார். நான் வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை. எனவே உங்கள் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட வேண்டாம். என் குடும்பத்துடன் சில காலம் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.அடுத்த ட்வீட்டில்,கலைஞர் மீது நான் எப்போதுமே பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் ஒரு தலைவர் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் வாய்க்காத தந்தை மாதிரி. அதை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
என்னையும் என் முடிவையும் புரிந்து கொண்டு மதிப்பளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. நிச்சயம் ஒரு நாள் அவர்களுடன் பேசுவேன்,என்று இன்னொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார் குஷ்பு.

திமுகவிலிருந்து விலகும் முடிவை அரை மனசோடு எடுக்காமல், இப்போதாவது எடுக்க முடிந்ததில் சந்தோஷம். அங்கு இருந்த வரை என்னால் முடிந்ததை சிறப்பாக செய்தேன். இனி என் மகள்கள்தான் உலகம்.சிலர் நான் கலைஞரை @kalaignar89 ட்விட்டரில் அன்ஃபாலோ செய்ததாக கூறியுள்ளனர். எப்படி கண்மூடித்தனமாக இப்படி சொல்கின்றனர். நான் ஒருபோதும் அவரை அன்ஃபாலோ செய்யவில்லை. நல்லா கண்ணாடி போட்டுக்கிட்டு பாருங்கள்.முட்டாள்களை விட ஆதரவாளர்கள் என்னை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் காதற்ற முட்டாள்களை விட, எனக்குப் பின்னால் ஒரு சுவர் போல நிற்கும் ஆதரவாளர்கள் அதிகம். நான் இன்னும் உயர உயர எழும்பி நிற்பேன். இன்னும் சில ட்வீட்களை குஷ்பு பதிவு செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago