இந்நிலையில், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, விமலுடன் மஞ்சப்பை ஆகிய படங்களில கமிட்டானார் லட்சுமிமேனன். இந்த இரண்டு படங்களுமே வில்லேஜ் கதை என்பதால் பக்கா கிராமத்து பெண்ணாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்தார். அதிலும் மஞ்சப்பை லட்சுமிமேனன் அதிகப்படியாக எதிர்பார்த்த படமாக இருந்தது.
இப்போது படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. என்றபோதும், படத்தின் வெற்றிக்கு முழுக்காரணமும் ராஜ்கிரணின் நடிப்பு மட்டுமே என்பதுபோல் பப்ளிசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், விமலை விட லட்சுமிமேனன் செம கடுப்பில் இருக்கிறாராம்.
ஒரு படம் என்றால் அதில் நடித்த அத்தனை பேரும்தான் அதில் உழைக்கிறோம். அதேபோல் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானதுதான் ஆனால், கஷ்டப்பட்டு நடித்தும் நம்மை இருட்டடிப்பு செய்து வருகிறார்களே என்று விமலைப்போலவே இப்போது லட்சுமிமேனனும் கோபத்தில் இருக்கிறார். அதன்காரணமாக, அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது, எனக்கு படிக்கிற வேலை நிறைய இருக்கு என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டாராம் நடிகை.லட்சுமிமேனனின் இந்த மாற்றம் கண்டு, இவரும் நயன்தாரா மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கே என்கிறது மஞ்சப்பை யூனிட்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே