செய்திகள்,திரையுலகம் நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

நடிகை இனியா வீட்டில் திருட்டு!… post thumbnail image
திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இனியாவின் வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இனியாவுக்கு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக நகைக்கடைக்கு சென்று நகைகள் வாங்கி வீட்டில் வைத்து இருந்தனர்.இந்நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும், குடும்பத்தினரும் இரவு காட்சி படம் பார்க்க சென்றனர்.

வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்கள். படம் முடிந்து வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது. ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும், பத்து பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று இருந்தனர். இதனால் இனியாவும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.இதுகுறித்து இனியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி