நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா?.. கேட்ட சிம்புவுக்கு ஓகே சொன்ன நயன்தாரா!…

சென்னை:-சிம்புவின் காதல் எப்படிப்பட்ட காதல் என்பது இந்த உலகம் அறியாதது அல்ல. அவருடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகைகளின் அதிகபட்ச வேலிடிட்டியே மூன்று மாதங்கள் தான். அதற்குள் அந்தக்காதல் புட்டுக் கொள்ளும்.ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு ஒரு காதல் மட்டும் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் தாங்கி நின்றதென்றால் அது நயனுடன் அவர் லவ்விய காதல் தான். அந்தளவுக்கு நயன்தாராவும் சிம்புவை உருக உருக காதலித்தார். இருவரும் சந்திக்காத இடங்கள் இல்லை, அடிக்காத லூட்டிகள் இல்லை,

சிம்புவுக்காக நயன்தாரா தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் தண்ணி போல வாரி இறைத்தார் என்றெல்லாம் அப்போது சொல்லுவார்கள். கூடவே சிம்புவின் ஓவர் டார்ச்சர்களையும் பொறுத்துக் கொண்ட நயன் அவருடான அந்தரங்க போட்டோக்களை ‘லீக்’ செய்தவுடன் தான் சிம்பு மீது ஓவர் வெறுப்பாகி அவரை விட்டுப் பிரிந்தார்.அந்தக்காதல் புட்டுக்கொண்ட பிறகு சிம்புவின் வலையில் விழுந்தவர் தான் ஹன்ஷிகா. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அந்தக்காதலும் சில மாதங்களுக்குள்ளாகவே தோல்வியில் முடிந்தது.இதனால் இருவருவே பரஸ்பரம் ஒரு அறிக்கையை விட்டு பிரிந்து விட்டார்கள். ஹன்ஷிகா மும்பை பெண் என்பதால் அவருக்கெல்லாம் இது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் சிம்புவோ இப்படி தொடர்ந்து தனது காதல் தோல்விகளை சந்திப்பதில் மனம் வெதும்பிப் போய் இருந்தாராம்.

இதனால் தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக மீண்டும் தனது முன்னால் காதலி நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.தனது சொந்தப்படத்தில் அவரை ஹீரோயினாக கமிட் செய்த சிம்பு படப்பிடிப்பு ஆரம்பித்த நாட்களில் அவரிடம் சேர்ந்து நடிக்கவே கொஞ்சம் கூச்சப்பட்டாராம். ஆனால் கிடைத்த கேப்பில் நயன்தாராவுடன் தனியாக பேசியபோது தான் அவருடைய நல்ல மனது அவருக்கு தெரிய வந்ததாம்.இதனால் கில்டியான சிம்பு “நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா..?” என்று வலியப் போய் கேட்டிருக்கிறார். முதலில் மறுத்த நயன் பிறகு அவருடைய பரிதாபமான முகத்தைப் பார்த்து ஓ.கே சொல்லியிருக்கிறார்.

அநேகமாக வருகிற மே அல்லது அதற்கடுத்தடுத்த மாதங்களில் ஏதாவது ஒரு நல்ல நாளில் அவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று சொல்கிறார்கள். நயன்தாரா ஏற்கனவே கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் தான். சிம்புவின் குடும்பமும் சமீபத்தில் தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள். ஆகவே சிம்பு – நயன்தாரா திருமணம் கிறிஸ்தவ முறைப்படி தான் நடக்க இருக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago