ஓட்டுக்கு பணம் வாங்கினால் 1 வருடம் ஜெயில்!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–பாராளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு கட்ட பயிற்சிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் 32 மாவட்ட கலெக்டர்களும், 7 தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தை கையாளுவது, வாக்குச் சாவடியை கண்காணிப்பது குறித்து ஆலோசனைகளும், பயிற்சியும் வழங்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 37 லட்சம்.வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர்கள் சேர்க்கப்படுவதால் வாக்காளர் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.தேர்தல் நேரத்தில் ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுப்பதும், வாங்குவதும் வீடியோ ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கப்படும்.ஓட்டுக்கு பணம் வாங்கும்போது பொது மக்கள் தங்கள் உரிமையை இழக்கிறார்கள். அரசியல்வாதிகள் வழங்கும் பிரியாணி, பரிசு பொருட்கள் போன்றவற்றை வாங்கினால் வெற்றி பெற்றவர்களிடம் 5 வருடம் எதையும் கேட்க முடியாது. போட்ட ஓட்டு வீணாகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, வாங்குவதை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். திரை அரங்குகள், போஸ்டர்கள், அறிவிப்பு பலகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.பறக்கும் படைகள் அமைக்கப்படும். பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த பறக்கும் படைகள் பயன்படுத்தப்படும். பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். 30 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், சுவர்களிலும் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம்.தமிழ்நாட்டில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்தும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதை தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கும் போதுதான் எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியும்.பொது இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள் இருந்தால் தேர்தல் விதிகளின்படி மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago