அதில்,எங்கள் படத்துக்கு இசை அமைப்பதாக அனிருத் ஒப்புக்கொண்டார். ஆனால் திடீரென்று இசை அமைக்க மறுத்துவிட்டார். குறிப்பிட்ட கால அளவிற்குள் பணியை அனிருத் தொடங்காததால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பி தரவில்லை.போன் செய்தபோது அதற்கு பதில் அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அனிருத் தனது செயலுக்கு தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் கூறும்போது,உங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளர் சங்கம் மூலம் திருப்பி தந்துவிடுகிறேன். படத்திற்கு இசை அமைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
இந்த விஷயத்தை சமாதானமாக முடித்துக்கொள்ளுங்கள். என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்கள் படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள் தயாரிக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே