மேலும் பொள்ளாட்சி ஆயர்பாடியைச் சேர்ந்த மினி பேருந்து டிரைவர் ரவி, அவருடன் பயணம் செய்த பொள்ளாட்சி சேரன் நகரைச் சேர்ந்த வீரமணி மனைவி வனதேவி (35), வால்பாறை வாட்டர் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மனைவி காந்தி (37), வையாபுரி மனைவி புஷ்பம் (58), பழனிசாமி மனைவி செல்வி (35), மணிகண்டன் மகள் நித்யபிரியா (20), பாலு மகன்கள் மணி (18), அருண்குமார் (10) மற்றும் தனலட்சுமி (45) மற்றும் சிதம்பம் கூத்தங்கோயில் பகுதியிலிருந்து மேல்மருவத்தூர் சென்று திரும்பிய தனியார் பேருந்து டிரைவர் ரஞ்சித் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் உள்ளிட்ட 45 பேர் கவலைக்கிடமான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தினால் திங்கள்கிழமை நள்ளிரவு கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காயமுற்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி