காமம்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஆஸ்காருக்கு செல்லும் காமசூத்ரா…

ஆஸ்காருக்கு செல்லும் காமசூத்ரா…

ஆஸ்காருக்கு செல்லும் காமசூத்ரா… post thumbnail image
‘காமசூத்ரா-3டி’ என்ற தலைப்பில் இயக்குநர் ரூபேஷ் பால், இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய நடிகை ஷெர்லின் சோப்ரா, மிலிந்த் குணாஜி, கிங் மால்கான், சலிம்குமார், நாசர், மகராந்த் தேஷ்பாண்டே, மலீனா கான், சுஷ்மித்ரா முகர்ஜி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு இது ஒரு செக்ஸ் படமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த படம் ஆஸ்கார் விருது பரிந்துரை போட்டியில் உள்ளது. அசல் இசைக் கோர்ப்பு, அசல் பாடல்கள் பிரிவில் இந்தப் படம் போட்டியிடுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஜனவரி 16 – ந்தேதி வெளியாகிறது,” என்றார்.

இந்த படம் பழங்கால இந்தியாவை பின்னணியாகக் கொண்டது. தனது கணவரைத் தேடி ஒரு அழகான இளவரசி கடற்பயணம் மேற்கொள்கிறாள். ஆனால் சகப் பயணி ஒருவருடன் அவள் மேற்கொள்ளும் இந்த பயணம், அவளது உடல், மனம், ஆன்மா என அத்தனையையும் புரட்டிப்போட்டு விடுகிறது. அது எப்படி என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி