காமம்,முதன்மை செய்திகள் கொல்கத்தாவில் 13 வயது சிறுமி பாலியல் கொடுமை …

கொல்கத்தாவில் 13 வயது சிறுமி பாலியல் கொடுமை …

கொல்கத்தாவில் 13 வயது சிறுமி பாலியல் கொடுமை … post thumbnail image

கொல்கத்தாவின் பார்க் வீதியில் தனது தாயோடு நடைபாதையில் வசித்து வந்த 13 வயது சிறுமி டாக்ஸியில் கடத்தப்பட்டு மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அருகே இறக்கிவிட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை தாயிடம் சொல்ல, அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் சிறுமியை ஏமாற்றி டாக்ஸியில் ஏறச் செய்த குற்றவாளி ஒருவரை கைது செய்துள்ளனர், மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே பகுதியில் இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி