விஜய் சேதுபதியின் சங்கு தேவனுக்கு சங்கா…

சங்குதேவன் திரைபடத்தின் படப்பிடிப்புக்காக திண்டுக்கல் போய் எட்டு நாட்களில் இரண்டு காட்சிகளை மட்டும் படமாக்கிக்கொண்டு காலவரையற்று படப்பிடிப்பைத் தள்ளிவைத்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டார்கள் திரைப்பட குழுவினர். இயக்குநர் ஹரியின் உதவியாளரான சுதாகர் என்பவர் தான் இந்த திரைபடத்தின் இயக்குனர். இந்த திரைப்படத்திற்கு தான் விஜய் சேதுபதி கடா மீசை வைத்து வித்தியாசமான முகத்தில் வலம் வருகிறார். விஜய் சேதுபதி கதா நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.

திண்டுக்கல்லில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. குவாரி போன்று பெரிய அரங்கமைத்து படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். படப்பிடிப்பு தொடங்கி எட்டுநாட்களில் படப்பிடிப்பை ரத்துச் செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்களாம். அதற்குக் காரணம் முதல்நாளிலிருந்தே இயக்குநரின் நடவடிக்கைகளில் கதா நாயகன் விஜய் சேதுபதிக்குத் திருப்தி அளிக்கவில்லையாம். ஒரு காட்சியை படமாக்கிவிட்டு அது சரியாக வந்திருக்கிறதா இல்லையா என்பதையே தீர்மானிக்கத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாராம் இயக்குனர் சுதாகர் மேலும் காட்சிகளை மிகவும் மெதுவாக எடுக்கின்றார் என்று விஜய் சேதுபதி ஒரே புலம்பலாம். எட்டுநாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில் இரண்டுகாட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்ததாம். ஒரே நாளில் இரண்டுகாட்சிகள் மூன்று காட்சிகள் என்று இயக்குனர்கள் கலக்கி கொண்டிருக்கும் போது எட்டுநாட்களில் இரண்டுகாட்சிகள் என்பதால் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியாம். இயக்குநர் மிக மெதுவாகச் செயல்படுவதைப் பார்த்த விஜயசேதுபதி, அவரைத் தனியே அழைத்து நிறைய அறிவுரைகள் வழங்கினாராம். அவற்றையெல்லாம் செவிமடுக்க இயக்குநர் தயாராகவே இல்லையாம். இதனால் மனம்நொந்த விஜயசேதுபதி, படப்பிடிப்பை நிறுத்திவிடுவோம், சென்னைக்குப் போய் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு மீண்டும் வருவோம் என்று சொல்லி படப்பிடிப்பை நிறுத்திவிட்டாராம். இந்தப்படம் தொடர்ந்து நடக்கும் என்பது சந்தேகம் என்றே அந்தப்படக்குழுவினர் பலரும் சொல்கிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் எப்படி விஜய் சேதுபதி சொதப்பினார் என்று பட குழுவினர் அதிசயிக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago