இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலு்த்தும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, நான் மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது.

ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்துவிடவில்லை.

அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் ஸ்கூட்டர்களிலும் ரயில்களிலும் பணிக்குச் செல்வோர் தங்கள் பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது.

ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல மும்பையும் இந்த மாபெரும் தேசமும் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்‌‌றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.

மகா. முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த யுஎஸ் தூதரகம்:

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.

ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக் சவாணுக்கும் துணை முதல்வர் சகன் புஜ்பால், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவர்களுக்கு பாஸ் வழங்க, அவர்களது அட்ரஸ் புரூப், அடையாள அட்டை நகல், போட்டோ, பேன்கார்டு எண், பாஸ்போர்ட் எண் எல்லாம் கோரப்பட்டது. மேலும் இவர்களுக்கு முறைப்படியான அழைப்பும் நேற்று மாலை வரை வரவில்லை.

இதையடுத்து ஒபாமா பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு அமெரிக்கத் தூதரம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் நேற்றிரவில் அமெரிக்கத் தூதரகம் அழைப்பிதழ்களையும் தந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஒபாமாவை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மகாராஷ்டிராவின் வரலாறு, பண்பாடு அடங்கிய புததகத்தை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். ஆனால் உள்துறை அமைச்சர் பாட்டில் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago