காஷ்மீரில் கலவரத்தை உண்டு பண்ணவும், காஷ்மீர் விடுதலைக்காவும் பாகிஸ்தானில் தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தி, பயிற்சி யளித்து அனுப்பி வைத்தோம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பினோம் என்று முதல் முறையாக ஒரு பாகி்ஸதான் தலைவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முஷாரப் ஜெர்மனி பத்திரிக்கை டெர் ஸ்பீகலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
காஷ்மீரில் நடந்து வரும் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அங்குள்ள மக்களுக்கு உதவியாகவும் ரகசியமாக போராளிகளை உருவாக்கி, பயிற்சி அளித்து அனுப்பி வத்தோம். அங்கு போராடி வரும் பெரும்பாலானோர் இங்கு (பாகிஸ்தானில்) பயிற்சி பெற்றவர்கள்தான்.
காஷ்மீர் விவகாரத்தில் நவாஸ்ஷெரீப் முதுகெலும்பு இல்லாதவராக இருந்தார். இதனால்தான் நாங்கள் (அப்போது ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தார் முஷாரப்) ரகசியமாக போராளிகளை உருவாக்கி அனுப்பி வைக்க நேரிட்டது. மேலும், காஷ்மீர்ப் பிரச்சினை குறித்து உலகமும் கண்களை மூடியபடி இருந்ததால் நாங்களே அதில் தலையிட நேர்ந்தது.
தனது சக இனத்தவர்கள் உரிமைக்காக போராடி வரும்போது அதே இனத்தைச் சேர்ந்தவர்கள், உதவுவது உலக இயல்புதானே என்று கூறியுள்ளார் முஷாரப்.
தற்போது இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார் முஷாரப். சமீபத்தில்தான் அனைத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியையும் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே