திரைப்படப்பாடல்,திரையுலகம்,பாடல்கள் லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா…

லவ் பெர்ட்சு – மலர்களே மலர்களே, இது என்ன கனவா… post thumbnail image

பெண்:
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

பெண்:
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா..

ஆண்:
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..

பெண்:
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில்
என்னை மறந்து போவதுதான் முறையா

ஆண்:
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே ..
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே

பெண்:
என் சுவாசம் உன் மூச்சில் ..
உன் வார்த்தை என் பேச்சில்..

ஆண்:
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

ஆண் :
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..
காதல் காதல் என்று பேசும் ..

பெண்:
நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்…

ஆண் :
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..

பெண்:
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே

ஆண் :
மறக்காது உன் ராகம், மரிக்காது என் தேகம்

பெண்:
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..

மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

ஆண் :
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..

பெண்:
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்

ஆண் :
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி