தமிழ்ப்பேழை,முதன்மை செய்திகள் தென்னாட்டின் மொழியினம் பாகம்-6

தென்னாட்டின் மொழியினம் பாகம்-6

தென்னாட்டின் மொழியினம் பாகம்-6 post thumbnail image

கோலமி,பார்ஜி, நாய்கி:

மத்திய பிரதேசத்திலும் ஐதராபாத்திலும் உள்ள சிலர் பேசும் மொழி கோலமி .இவர்களை அடுத்த இனத்தவர் பேசுவன பார்ஜியும் நாய்கியும்.

மால்டா:

வங்காளத்தில் ராஜ்மகால் மலைகளில் வாழும் சில ஆயிரம் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழி பேசுவோர் மாலர் என்றும், இராஜ்மஹாலர் என்றும் அழைக்கப்பெறுவர்.

ஒரவொன், கட்பா, குரு:

சோடாநாகபுரியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் வாழும் சில மக்கள் பேசும் மொழிகள் இவை.பாட்ஸ்க் பாதிரியார் ஒரவொன் இலக்கணத்தை எழுதியுள்ளார்.

இத்திருந்தா மொழிகளைப் பேசுவர்களேயன்றி வங்காளத்திலும் ஒரிசாவிலும் வாழும் பூயியர்கள் கொச்சர்கள் ஆகியோரும் திராவிடர்களே என்பர்.

பிராஹூய் மொழி:

இந்தியாவின் வடமேற்கே பலுசிஸ்தானத்தின் ஒரு சார் மக்கள் பேசும் மொழி இது. இம் மொழியில் திராவிட மொழியின் அடிப்படைக்கூறுகள் சில உள்ளன.மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் ஒத்துள்ளன.திராவிட இலக்கண அமைப்புகளும் உள்ளன.

இம்மொழியில் திராவிட மொழிக்கூறுகள் சிலவே என்றும் ,மற்றவகைக்கலப்புகள் பல என்றும் கூறி திராவிட மொழி வகைகளுள் இதனை ஒன்றாகச் சேர்க்காமல் விட்டு விட்டார் டாக்டர் கால்டுவெல்.

பிராஹீய் மொழி இந்தியாவின் வடமேற்குக் கணவாயை அடுத்துள்ள பகுதியில் வழங்குவதால் திராவிடர்கள் இவ்வழியாகவே இந்தியாவிற்குள் புகுந்து சிந்து நதிக்கரையில் பரவினர் என்பர் கால்டுவெல்.ஆனால் திராவிடர் தென் இந்தியாவில் சிந்துநதிக்கரைவரையிலும் பரவியபின் வடமேற்குக் கணவாய் வழியாக நடு ஆசியாவிற்குச் சென்றனர் என்ற கொள்கைக்கும் இதனைச் சான்றாகக் கூறலாம்.

திராவிடர்களும் பிராஹூய் மக்களும் ஒரே இனத்தவர் என்பதற்குச் சான்றுகள் இல்லை .ஆனால் திராவிட மொழி பேசுவோரின் கலப்பு அவர்களிடையே ஏற்பட்டு நிலை பெற்றது. என்பதற்கு இந்த ஒற்றுமைக் கூறுகள் சான்றாகும் என்பர் வி.ஆர்.ஆர்.தீட்சிதர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி