சங்ககாலம்,முதன்மை செய்திகள் சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4) post thumbnail image
  • திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன்.
  • ஆலவாய் பெருமான்-சிவன்.
  • குன்று எறிந்த வேள்-முருகன்.
  • துவரைக்கோமான்-கண்ணன்.
  • நிதியின் கிழவன்-குபேரன்.
  • மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர்.
  • மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள்.
  • மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர்.
  • காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம்.
  • வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம்.
  • இடை, கடைச் சங்கத்திற்கு உருய மன்னன்-முடத்திருமாறன்.
  • முச்சங்கத்திற்கும் உரிய நூல்-அகத்தியம்.
  • முத்தமிழ் இலக்கண நூல்-அகத்தியம்.
  • இயற்றமிழ் இலக்கண நூல்-தொல்காப்பியம்.
  • இசைத்தமிழ் இலக்கண நூல்-முதுநாரை.
  • நாடகத்தமிழ் இலக்கண நூல்- இந்திரகாளியம்,பஞ்சமரபு.
  • புலவர் தலைவர் அகத்தியர்.
  • அகத்தியர் மாணவர் 12 பேர். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார்,காக்கை பாடினியார்,நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • அகத்தியரின் மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.
  • இது ஒரு புற நூல்.
  • அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம்.
  • இது 12000 நூற்பாக்களைக் கொண்டது.தற்போது 103 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • இது 12 பகுதிகளை உடையது.அவை எழுத்து, சொல், பொருள்,யாப்பு , சந்தம். வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து.
  • “எள்ளின் நின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தின்றும் எடுபடும் இலக்கணம்” என்பது அகத்திய நூற்பா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி