பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!! post thumbnail image

வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் அவர்கள் , சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடருவதால் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இப்போராட்டம் காரணமாக கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கேன்களை இருப்பு வைத்திருந்த சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடக்கூடாது ,குடிநீர் உறிஞ்சுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் என்று உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அடுத்ததாக 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றது.

ஆனால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. ஸ்டிரைக் நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி