செய்திகள்,பரபரப்பு செய்திகள் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!

வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!!

வங்கி ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு ரூ. 2 லட்சம் கொள்ளை!! post thumbnail image

டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள்.

டெல்லியில் உள்ள ஒரு கார்பரேஷன் வங்கியின் கிளையில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் விழுந்தார். அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது.

இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி