செய்திகள்,முதன்மை செய்திகள் ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா!

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா! post thumbnail image
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட மனித உரிமை அவைக்கென நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகள் பெற்றால் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வாக முடியும். இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஐ.நா சபையில் மனித உரிமை அவையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கென ஐந்து இடங்கள் உள்ளது . உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக ஆதரவை பெற்றது. 188 வாக்குகளை பெற்றுள்ள இந்தியா வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இருக்கும்.

பக்ரைன், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் இந்தியாவுடன் சேர்த்து பசிபிக் பிராந்தியத்திற்கென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி