தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !

உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது !

உலகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் இயங்காது ! post thumbnail image

சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவை பாதிக்கப்படுகிறது.இன்டர்நெட் இயங்க அடிப்படையாக இருக்கும் கருவியே சர்வர் .

இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 48 மணி நேரங்களில் ‘டொமைன் சர்வர்கள்’,உள்கட்டமைப்பு வசதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இதனால்,இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.டொமைன் நேம் சிஸ்டம் ஐ பாதுகாக்கும் க்ரிப்டோகிராஃபிக் கீ-யை மாற்றும் பணியை ஐ.சி.ஏ.என்.என். மேற்கொள்ள உள்ளது.

ஐ.சி.ஏ.என்.என். என்பது இணைய சேவையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு அமைப்பு ஆகும். உலகம் முழுக்க சைபர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாகி வரும் நிலையில் பராமரிப்பு பணி அவசியமானது என்று தெரிவித்துள்ளது ஐ.சி.ஏ.என்.என்.

தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான சி.ஆர்.ஏ. வெளியிட்டுள்ள அறிவிப்பில்” பாதுகாப்பான, ஸ்திரமான டி.என்.எஸ்.-ஐ உறுதி செய்ய உலகளாவிய ஷட்-டவுன் அவசியமானது.

“மாற்றத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் தயாராகவில்லை என்றால் பயனாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், சரியான சிஸ்டம் பாதுகாப்பை மேற்கொள்வதன் மூலம் இதனால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முடியும்,” என்று சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது.

இணையதளங்கள் பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவைக்கு 48 மணி நேரங்களுக்கு இன்டர்நெட் பயனாளர்கள் இடையூறை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி