செய்திகள்,பரபரப்பு செய்திகள் பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!

பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்!

பாலிவுட் பாலியல் குற்றச்சாட்டு : தனுஸ்ரீதத்தா வாக்குமூலம்! post thumbnail image
நடிகர் நானா படேகர் மீது புகார் அளித்துள்ள நடிகை தனுஸ்ரீ தத்தா, வாக்குமூலம் கொடுத்து , 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்என கூறினார் . இந்த குற்றச்சாட்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் புகாரை நானா படேகர் மறுத்துவிட்டார், தனுஸ்ரீ பொய் சொல்வதாக கூறுகிறார் .

நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார் அளித்தார்.

தனுஸ்ரீ தத்தா நானா படேகருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார். போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மனோஜ் குமார் சர்மா கூறும் போது, “நானா படேகர் உள்ளிட்டோர் மீது 354 மற்றும் 509 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் நாங்கள் வழக்குபதிவு செய்துள்ளோம்“ என்றார்.

நானே படேகர் போலீசார் விரைவில் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி