செய்திகள்,பரபரப்பு செய்திகள் 20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !

20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !

20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் ! post thumbnail image

மந்தைவெளியை சேர்ந்த 20 ருபாய் டாக்டர் என மக்களால் அழைக்கபடும் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார்.

டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவைக்கு வந்தவர் ஜெகன்மோகன். ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்க வைத்தவர் இவர் . 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில் வரும் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் வாங்கி கொண்டுதான் சிகிச்சை அளித்தார்.தன்னிடம் வேலைபார்க்கும், நர்ஸ், கரண்ட் பில் கட்டுவதற்கு ஒரு ரூபாய் கட்டுப்படியாகவில்லை. அதனால் 20 ரூபாய் வாங்கினார் . எப்போது இவர் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தாரோ அது முதல் தன் நோயாளிகளிடம் ஒருபைசா கூட அதிகமாக வாங்கியது இல்லை. 20 ரூபாய் டாக்டர் என்ற பெயர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. குறைந்த கட்டணம், தரமான சிகிச்சை என்ற பெயர் டாக்டர் ஜெகன்மோகனுக்கு ரொம்ப சீக்கிரத்திலேயே ஒட்டிக் கொண்டது.ஒருநாளைக்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அளிப்பாரம். 20 ரூபாய் கூட இல்லாதவர்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து அனுப்பி விடுவாராம். இவருக்கு வயது 76. நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் காப்பாற்ற முடியாமல் உயிர் பிரிந்தது.

டாக்டர் ஜெகன்மோகன் மறைவு கேட்டு பகுதிமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறாக்ள.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி