செய்திகள்,பரபரப்பு செய்திகள் 100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !

100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !

100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் ! post thumbnail image

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் என விறக்கப்பட்டதால்,ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் பங்கினை அடித்து நொறுக்கினர் .

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது அவ்வப்போது.முன்பெல்லாம் பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்றப்படும்.ஆனால் இப்போது தினமும் ஏற்றபடுகிறது.இதனால் மக்கள் பெரும் கஷ்டத்தினை அனுபவித்து வருகின்றனர்.விலைவாசியும் ஏறிவருகிறது .100 ரூபாய் தொட்டுவிடுமோ என அச்சத்தில் மக்களுள்ளனர்.2 மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.தற்போது 89 ரூபாய்ககு விற்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையான உயர்ந்து வருகிறது.

ஒடிசா மாநிலம் பூரியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்கபட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரும் எவ்வளவோ முயற்சி செய்தும் பொது மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பொது மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி