செய்திகள்,பரபரப்பு செய்திகள் ஜாமீன் கிடைத்தது ! வெளியே வருகிறாரா கருணாஸ்?

ஜாமீன் கிடைத்தது ! வெளியே வருகிறாரா கருணாஸ்?

ஜாமீன் கிடைத்தது ! வெளியே வருகிறாரா கருணாஸ்? post thumbnail image
கைது செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.இதையடுத்து இன்று அவர் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை எதிர்த்து கருணாஸ் மேடையில் பேசிய வீடியோ வைரல் ஆனது.இதையடுத்து மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் போலீசாரால் கடந்த 23ஆம் தேதி கருணாஸ் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகளின் போது ஏப்ரல் 10ஆம் தேதி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது ,கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலைமுயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.இதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீஸ் கூறியது .ஆனால் , கொலை முயற்சி வழக்கை மாஜிஸ்திரேட் எடுத்துக்கொள்ளவிலை.தடையை மீறி ஆர்ப்பாட்டம் சென்ற வழக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளபட்டது .

இந்நிலையில்,முதல்வரை அவதூறு பேசிய வழக்கில் நேற்று காலையிலும்,ஐபிஎல் வழக்கில் நேற்று மாலையும் கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.அவர் நாளை வெளியே வருவாரா அல்லது மீண்டும் ஏதேனும் வழக்கில் கைது செய்யப்படுவடுரா என்று குழப்பம் நிலவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி