அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள் எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள்

எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள்

எய்ட்ஸ் ஆ ..எய்ம்ஸ் ஆ ? பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு : செல்லூர் ராஜு பரிதாபங்கள் post thumbnail image
அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதற்கு பதிலாக எய்ட்ஸ் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையதள வைரல் நாயகன் அமைச்சர் செல்லூர் ராஜு அவ்வப்போது ஏதெனும் பேசி ட்ரெண்டிங்லே இருந்து வருகிறார் .வைகை ஆற்றை தெர்மாகோல் போட்டு மூடியது முதல் இன்று வரை மீம் போடுபவர்கள் கடவுளாக வழிபாட்டு வருகின்றனர்.சயின்டிஸ்ட் , விஞ்ஞானி என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் .அதெல்லாம் அவர் பாக்கிறாரா என்று தெரியவில்லை.பார்த்துவிட்டு வேண்டும் என்று பேசுகிறாரா என்றும் தெரியவில்லை . இதனால் சமூக வலைத்தளங்களில் எப்போது இவர் பேசுவார் என்று மீம் கிரியேட்டர்கள் காத்துகொண்டு உள்ளனர்.

மதுரையில் நடந்த விழா ஒன்றில் பேசிய அமைச்சர் ” த மிழ்நாட்டுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் பொங்கல் சுற்றுலா விழா, பொள்ளாச்சியில் வெப்பக்காற்று பலூன் விழா, மணப்பாட்டில் படகு மற்றும் நீர்சறுக்கு திருவிழா போன்ற விழாக்களால் சுற்றுலா அதிகரிக்கிறது.

மதுரையில் 1500 கோடி மதிப்பீட்டில் எய்ட்ஸ் மருத்துவமனை வர உள்ளது “என்று அவர் கூறினார்.அமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனையை எய்ட்ஸ் என்கிறாரே என பேச்சை கேட்டவர்கள் அதிர்ந்தனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி