செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

ஆதார் கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

ஆதார்  கட்டாயமா ? உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !! post thumbnail image
அரசு சேவைகள் அனைத்தையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்சில் மூன்று பேர் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர் .தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட பெஞ்சில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சிக்ரி ஆகியோர் ஒரே தீர்ப்பை அளித்துள்ளனர்.நீதிபதி சிக்ரி சுமார் நாற்பது பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வாசித்தார் .அதில் ஆதார் எண் கட்டாயமாகிறது என அவர் கூறினார் .மற்ற இரண்டு நீதிபதிகள் வேறு தீர்ப்பினை கூறினாலும் சிக்ரி தீர்ப்பையே இறுதியானது .

அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி “ஆதார் அட்டைக்கும் மற்ற அட்டைகளுக்கு வித்தியாசம் நிறையவே உள்ளது .ஆதாரை போலியாக தயாரிப்பது கடினம் .ஆதார் மூலம் குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன .அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்.ஆதார் கட்டாயமாக்கும் சட்டத்தை நீக்க தேவையில்லை .அந்த சட்டம் சரியாக உள்ளது .சில திருத்தங்கள் மட்டும் செய்ய அரசை அறிவுறுத்துகிறோம் .ஆதார் பாதுகாப்பானது .அரசு பணிகளுள்க்கு ஆதாரை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் .அனைத்து சலுகைகளையும் விரைவாக மக்கள் பெறமுடியும் .பணிகளும் விரைவாக முடியும் .ஆதார் பாதுகாப்பு கடுமையாக்கப்பட வேண்டும் .ஆதார் எண் விபரங்களை பாதுகாக்க மிக வலிமையான கட்டமைப்பு வேண்டும்.இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் ஆதார் விபரங்களை கேட்பது சட்ட விரோதம்.தனியார் நிறுவனங்களுக்கு நம் ஆதார் எண்ணை யாரும் அளிக்க வேண்டியதில்லை.ஆதார் சட்டத்தின் 57வது சட்டப்பிரிவு நீக்கப்படுகிறது.இனி மொபைல் நிறுவனங்கள் ,தனியார் நிறுவனங்கள் ,சிம் கார்டு நிறுவனங்கள் , ஆதார் கட்டாயம் என கோரா முடியாது .பள்ளிகளில்,சிபிஎஸ்ஈ,நீட் உள்ளிட்டவற்றில் இனி ஆதார் கட்டாயமில்லை .கல்வி என்பது அடிப்படை உரிமை.வங்கிக்கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை .ஆனால் ,பான் கார்டினை ஆதாருடன் இணைக்கை வேண்டும் ” என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

ஆதார் தேவை :
1.பான் கார்டு
2. அரசின் சலுகைகள் பெற
3.ரேஷன் கடை
4.சமையல் காஸ் மானியம்
5.நலத்திட்ட உதவிகள் பெற .

ஆதார் தேவையில்லை :
1.வங்கி கணக்கு துவங்க
2.செல்போன் / சிம் கார்ட் வாங்க
3.பள்ளியில் சேர /படிக்க
4.நீட் உள்ளிட்ட பரிட்சைகளுக்கு

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி