அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன ?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன ?

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன ? post thumbnail image
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசு சிலைக்கடத்தல் பிரிவு தலைமை அதிகாரியை மாற்றி, அதன் மூலம் அப்பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தலைவராக இருந்த பொன்.மாணிக்கவேலை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. பல்வேறு மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடத்தல் கும்பலை காப்பாற்ற தமிழக அரசு துடிக்கக் கூடாது என, வலியுறுத்தியுள்ளார்.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, நேர்நின்ற விசாரணை அதிகாரியான பொன்.மாணிக்கவேல், கோவில் சிலைகளை பாதுகாத்து வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; சிலைக் கடத்தல் தடுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் எனக்குத் தெரியாமலும், உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறாமலும் மாற்றப்படுகிறார்கள். சிலைக் கடத்தல் குறித்த எனது விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது என குற்றம்சாட்டினார். அதைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் ஆணையிட்டனர். இந்த சமயத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டார் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி