செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…

பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!…

பிரபல நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி!… post thumbnail image
சென்னை:-கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகவும், செம்மரம் கடத்தல் தொடர்பாகவும் சித்தூர் போலீசார் சென்னையில் சிலரை கைது செய்துள்ளனர்.

இதில் நடிகர் சரவணனனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் தகவல் பரவியது. இந்நிலையில் இதுப்பற்றி விசாரித்தபோது இது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சவரணன் தற்போது முடிச்சூரில் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருவது தெரிய வந்தது. யாரோ வேண்டாத சிலர் இதுபோன்ற வதந்தியை பரப்பி விட்டுள்ளதாக நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி