செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…

பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!…

பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்: அதிகாரிகள் அதிர்ச்சி!… post thumbnail image
டோக்கியோ,:-ஜப்பான் பிரதமரின் அலுவலக ஊழியர்கள் சிலர், இன்று 5 அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றபோது, அங்கு சிறிய ஆளில்லா விமானம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விமானத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆளில்லா விமானம் 50 செ.மீ. அளவு விட்டத்தில் இருந்தது. அதில், சிறிய காமிரா ஒன்றும், பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது. ஆபத்தை விளைவிக்கக் கூடிய வேறு எந்த பொருட்களும் அதில் இல்லை. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தற்போது இந்தோனேஷியாவில் இருக்கிறார். எனினும், பிரதமர் அலுவலக கட்டிடத்தில் ஆளில்லா விமானம் கண்டுபிக்கப்பட்டது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி