செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!…

மொபைல் நிறுவனம் மீது கேப்டன் டோனி வழக்கு!… post thumbnail image
புது டெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார். இதை தொடர்ந்து டோனியின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அந்த மொபைல் நிறுனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் டோனி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். கோர்ட்டு உத்தரவையும் மீறி மொபைல் நிறுவனம் தனது பெயரை பயன்படுத்துவதாக மனுவில் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி