செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!…

மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்!… post thumbnail image
புதுடெல்லி:-பெரிய மின்சாதனங்களில் ஆரம்பித்து செல்போன் போன்ற சிறிய மின்சாதன பொருட்கள் மூலம் உருவாகும் மின் கழிவுகளை உருவாக்குவதில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா-வின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியா உற்பத்தி செய்த மின் கழிவுகளின் மொத்த அளவு 1.7 மில்லியன் டன் ஆகும். முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன.

இவ்விரு நாடுகளும் சேர்ந்து உலகத்தில் உருவாகும் மொத்த மின்கழிவில் 32 சதவீதத்தை உருவாக்குகின்றன. அதேபோல் ஆசிய நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து மொத்தமாக 16 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. இது சராசரியாக ஒரு தனி மனிதருக்கு 3.7 கிலோ கிராம் ஆகும். மிகவும் பின்தங்கிய நாடுகள் இருக்கும் கண்டமாக கருதப்படும் ஆப்பிரிக்கா தான் மிக குறைந்த மின்கழிவுகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் சேர்ந்து 1.6 மில்லியன் டன் மின்கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் உலகத்தின் மொத்த மின்கழிவு உற்பத்தியானது 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கி போகாத இந்த மின்கழிவுகளால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் மோசமன பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இனப்பெருக்க, இரத்தம் மற்றும் நரம்பு அமைப்புகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. மின்கழிவுகளில் இருந்து வெளிப்படும் மெர்குரி மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி