செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா!…

நடிகை ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா!…

நடிகை ஸ்ருதிஹாசன் இனிமேல் நடிக்க முடியுமா!… post thumbnail image
சென்னை:-உலக நாயகனின் மகள் என்ற பெரிய அந்தஸ்து இருந்தும் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் முன்னேறியவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சில மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை திடிரென்று அப்படத்திலிருந்து விலகினார். இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இவர் மீது வழக்கு தொடர்ந்து, இனி ஸ்ருதி நடிக்க கூடாது என்ற அளவிற்கு கூறப்பட்டது.

தற்போது ஸ்ருதி தரப்பிலிருந்து, இந்த படத்திற்காக நான் எந்த முன் பணமும் வாங்க வில்லை, என் மீது வழக்கு தொடர்வதற்கு முன்பே, தமன்னாவை புக் செய்து விட்டார்கள் என்று அந்நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும், தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்க்க, தென்திந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான பி.எல்.தேனப்பன், டி.சிவா முதலானோர் அந்த தயாரிப்பு நிர்வாகத்தினரிடம் பேசினர். தற்போது வந்த தகவலின் படி ஸ்ருதிஹாசன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் அந்த பிரச்சனையிலிருந்து விடுப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி